சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கை உருவாக்க வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (மார்ச் 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.காங்கேயன், மாவட்டச் செயலாளர் இரா.பாரி, மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரபத்திரன், போக்குவரத்து மண்டல நிர்வாகி ஏ.சேகர், டாஸ்மாக் மாவட்ட நிர்வாகிகள் பி.வெங்கடேசன், காமராஜ், பி.சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்