கொரோனா விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும், கல்வி நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஆக. 12 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் டிக்சன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் ப.லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.