காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் வியாழனன்று (ஏப்28) மாநிலம் முழுவதும் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சென்னை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.கருணா ரமேஷ் தலைமையில் மாநில அமைப்பாளர் வி.விஜயகுமரன், முன்னாள் மாநிலச் செயலாளர் அ. அங்கண்ணன், அரசு ஊழியர் சங்க தங்கசாலை பகுதித்தலைவர் மோகன்தாஸ், வடசென்னை மாவட்ட துணை தலைவர் எம்.விவேகானந்தன், பொதுப்பணி பண்டகசாலை ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜி.மகேந்திரன், பி.கார்த்திகாயினி மற்றும் மருந்தாளுநர்கள் பங்கேற்றனர்.