சென்னை ரயில் நிலையத்தில் ரயில் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக இது நாள் வரை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பாக வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவ்டத்தலைவர் ஜெயந்தி. மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார். மாவட்டச்செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.