திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் தலையிடக் கோரியும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடலூர், ராணிப்பேட்டை, ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் பி. டில்லிபாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, வட்டார தலைவர்கள் உரையாற்றினர்.