districts

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம்.செந்தில், வி.ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.சேகர், ஆர்.சீனிவாசன், ஜெ.ஜெயகுமார், டி.எஸ்.மோகன், வி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், கே.வீரமணி ஆகியோர் பேசினர்.