districts

img

பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, நவ.4-  கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி பட்டு சேலை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்,  பட்டு நெச வாளர்கள் அனைவருக்கும் தேசிய அடை யாள அட்டை, முத்ரா திட்டத்தில் வங்கி கடன் வழங்க வேண்டும். நெசவாளர்கள் அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்,  ஆரணியில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி அண்ணா சிலை அருகில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அமைப்பாளர் எம். வீரபத்திரன் தலைமை தாங்கினார். தலைவர் கே.பி.பரமாத்மன், ஆரணி சிபிஎம் நிர்வாகிகள் ரமேஷ் பாபு, பெ. கண்ணன், சி. அப்பாசாமி,  சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் இரா.பாரி, காங்கே யன்,  முரளி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.