விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாய பாசன ஏரிகளில் அரசு விதிமுறைகளை மீறி நடைபெறும் மண் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர். டி.முருகன், தலைவர் ஆர்.தாண்டவராயன், பொருளாளர் பி.சிவராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.