வேலூர், ஏப். 20 - கார், வேன் (நிறுத்ததை) அப்புறப்படுத்த நிர்பந்திக் கும் விருதம்பட்டு காவல்துறையினரைக் கண்டித்து சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓடை பிள்ளையார் கோயில் அருகே வேலூர் மாவட்டத் தலைவர் ஜி.கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.பிரபாகரன், ராமு (ஆட்டோ தொழிலாளர் சங்கம்), எம்.கணேஷ் (விவசாயிகள் சங்கம்) ஆகியோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து பேசினர். இதில் நிர்வாகிகள் ஆர்.முரளி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச் சந்திரன் செய்தியாளர் களிடம் கூறுகையில், காட்பாடி ஓடை பிள்ளை யார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் வடிகால் வாரியம் அலுவல கம் எதிரில் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக சுமார் 75க்கும் மேற்பட்டோர் வாடகை கார்,
வேன் ஓட்டி வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் திடீரென செவ்வாயன்று (ஏப். 18) விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ஸ்டாண்டுக்கு வந்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறாக உள்ளதாகக் கூறி அனைத்து வாகனத்தையும் அப்புறப்படுத்தி ஸ்டாண்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு இடையூறின்றி தொழில் செய்து வருவதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறி யதை ஏற்காமல் நிறுத்தப் பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கார், வேன் ஓட்டும் தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை கேள்வி குறியாக்கும் காவல் துறை யினரின் இந்த நடவடிக் கையை உடனடியாக கைவிட வேண்டும். இந்த தொகுதி அமைச்சர் துரை முருகன் இந்த பிரச்சனை யில் தலையிட்டு தொழி லாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறினார்.