மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தியும், பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கண்ணில் கறுப்பு துணி கட்டி திருவொற்றியூர் பெரியார் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் குணா, மாவட்டச் செயலாளர் மு.நித்திஷ், பகுதி தலைவர் அகல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.