மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில அரசு பதவி விலக வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 28) தட்டாங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி தலைவர் ஹேமந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், நிர்வாகிகள் பிரதீப், ரோசி, இந்திய மாணவர் சங்கத்தின் பகுதி ஒருங்கிணைப்பாளர் காரல் சே உள்ளிட்டோர் பேசினர்.