வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர செய்ய வலியுறுத்தி மீஞ்சூர் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (செப் -25), மீஞ்சூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, நிர்வாகிகள் இ.ஜெயவேலு, பாண்டியன், வெங்கடேசன், ரலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.