உடுமலை, பிப்.9- அங்கன்வாடி ஊழியர்களுக்கு சட் டப்பூர்வ ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி மடத்துக்குளம் ஒன் றிய அலுவலகத்தின் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங் கத்தினர் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய் வூதியர் சங்கத்தின் வட்டார தலைவர் மின்னல்கொடி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவி லைப்படியுடன் கூடிய சட்டப்பூர்வ ஓய் வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தைத் தனியாருக்கு ஒப்படைப்பதைக் கைவிட்டு சத்துணவு ஊழியர்களை வைத்து திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணை செயலாளர்கள் செல்வி, மற்றும் மாவளப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலா ளர் குணசேகரன், மடத்துக்குளம் வட்டக் கிளை தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ராமதுரை, அரசு ஊழியர் சங் கத்தின் சார்பாக சிவக்குமார் பாலு, சத்து ணவு ஊழியர் சங்கத்தின் சாவித்திரி, சத் துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பி னர் உமாபதி ஈஸ்வரன், வட்டக்கிளை செயலாளர் பரிமளம் மற்றும் அங்கன் வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் கருணாநிதி நிறைவுரையாற் றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டார்கள்.