ஓய்வூதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முறையாக அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளியன்று (நவ.3) மாநிலம் முழுவதும் கருப்பு அட்டை அணிந்து தமிழ்நாடு இபிஎஸ்-95 பென்சனர்கள் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை இபிஎப் பென்சனர்கள் நலச்சங்கம் சார்பில் தாம்பரம் மண்டல ஆணையர் அலுவலகம் முன்பு சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.