அரசு பணிகளை அழிக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (நவ 8) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் இரா.பண்டுரங்கன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.