districts

img

அரசு மருத்துவமனையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, டிச. 16-  திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும், சுகாதார சேவையை மேம்படுத்த கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தீபநாதன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு .முரளி, யாசர் அராபத், வந்தவாசி வட்டாரச் செயலாளர் அப்துல் காதர், விவசாய சங்க வட்டார செயலாளர் ஜா.வே.சிவராமன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார், ஓய்வூதியர் சங்கத்தின்  பால்ராஜ், விவசாயிகள் சங்க வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிளைச் செய லாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.