திருவண்ணாமலை, டிச. 23- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத் தில் உள்ள உச்சிமலை குப்பம், இறையூர், நீப்பத் துறை, முறையாறு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கில் குடி யிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து 9 மாத காத்திருக்கும் அனை வருக்கும் அட்டை வழங்க வேண்டும், சிறுபான்மை மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ஏ. லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், வட்டார நிர்வாகிகள் காமராஜ், சி.எம். பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.