districts

img

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.17-  நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி களில் நிரந்தரப் பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சா.கோதண்டபாணி துவக்கி வைத்தார். நகராட்சி, மாநக ராட்சி அலுவலர் சங்க மாநிலப் பொரு ளாளர் இரா.சுவாமிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி, அலுவலர் சங்கம் கரு.மணிவண்ணன், சிஐடியு உள்ளாட்சி சங்கம் எம்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சம்மேளனம் மாநில துணைச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினா். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ப.மதிவாணன் நன்றி கூறினார்.  ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை 152, 139 ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.