அத்துமீறும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு, பிப்.8- அத்துமீறும் ஆளுநர்கள்; அடாவடி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக் கட்சி களின் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர் தலைமையில் வியாழனன்று (பிப்.8) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் இ.முத்துக் குமார், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எ.ராஜ்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், மாவட்ட செயலாளர் யூனிஸ், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வ.கனல்விழி, மதிமுக மாவட்ட செயலா ளர் ஆர்.பார்த்திபன், சிபிஎம்எல் லிபரேஷன் கட்சி யின் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன், பாட்டாளி வர்க்க சமரன் அணி மாவட்ட செயலாளர் பி.கார்த்திகேயன், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், விசிக நகர செயலாளர் ஜெ.ரவீந்திரன், மதிமுக நகர செயலாளர் சுரேஷ்குமார், சிபிஎம் பகுதி செயலாளர் கே.வேலன், திமுக தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், திமுக நகர செயலாளர் ச.நரேந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மாநில சுயாட்சிக்கு எதிரான ஆளுநர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், பிப்.8 - மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு மற்றும் ஆளு நர்களைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் காஞ்சிபுரம் காந்திரோடு, பெரியார் தூண் அருகே (பிப்.8) வியாழனன்று நடைபெற்றது. இதில் திமுக காஞ்சி புரம் தெற்கு மாவட்ட செய லாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், சிஐபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறு முகநயினார், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ப.கார்த்திக், மதிமுக மாவட்டச் செயலாளர் இ.வளையாபதி, விசிக மாவட்டச் செயலாளர் மதி.ஆதவன், தமுமுக மாவட்டச் செயலாளர் ஜெ.சலீம் கான், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.நேரு உள் ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
சென்னை,பிப்.8- சென்னையில் வியாழனன்று மர்மநபரால் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையொட்டி சென்னையில் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் சில மணிநேரம் பதற்றமாக காணப்பட்டது. மோப்பநாய்கள் மூலம் மேற்கொண்ட சோதனையில் புரளி எனத்தெரிந்ததும் சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் 13 பள்ளிகளும் வெள்ளியன்று வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித் துள்ளார்.
உற்சவர் கழுத்தில் நகை திருட்டு: அர்ச்சகர் மீது வழக்கு
அம்பத்தூர், பிப்.8- திருவேற்காடு கருமாரி யம்மன் அம்மன் கோவிலில் உற்சவர் கழுத்தில் இருந்து 7 சவரன் நகையை திருடிய அர்ச்சகர் சண்முகம் (எ) பாபுவை (40) காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.
புதுச்சேரியில் யார் யாருக்கு மடிக்கணினி: முதல்வர்
புதுச்சேரி, பிப்.8- புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாய் சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டிடதிறப்பு விழா பிப்.8 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதிய தாய் சேய் துணை நல்வாழ்வு மையக் கட்டி டத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், “புதுச்சேரி யில் நல்ல கல்வி மாணவர்க ளுக்கு கிடைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ரூ.68 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அறிவிக்கும்போது கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது கல்லூரிக்கு சென்றுவிட்டனர். அந்த மாணவர்கள் எங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு நிச்சயமாக லேப்டாப் வழங்கப்படும்”என்றார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 250 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. அதேபோன்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டு அவர் நல முடன் இருக்கிறார். இதுபோல் புதிய தொழில்நுட்பங்களுடன் சிறப்பு மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை எடுத்துக் கொண்டு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். விழாவில் சட்டப் பேரவைத் தலை வர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீர செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.