பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என அறிவித்த தமிழக நிதி அமைச்சரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் சுப்ரமணி தலைமையில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க கிளைத் தலைவர் யோகாநந்தம், குப்புசாமி, அன்பு, கவுஸ், சுரேஷ், ரஞ்சித்குமார், குப்பன், எம்.பி.வெங்கிடேசன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கடலூர் அரசு மருத்துவமனை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.