districts

img

சிஐடியு நிர்வாகிகளுக்கு பணி மறுத்த மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர், ஜன. 1 - பழிவாங்கும் நோக்கில் சிஐடியு நிர்வாகிகளுக்கு பணி வழங்க மறுத்த மேலாளரை கண்டித்து திருப்பத்தூர் பணிமனை முன்பு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரி மண்டலம், திருப்பத்தூர் பணிமனையில் சிஐடியு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பெயர் பலகை திறப்பு விழா, ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை விளக்கக் கூட்டம் வெள்ளி யன்று (டிச.31) நடைபெற்றது. சிஐடியு சங்கத்தின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத கிளை மேலாள ரும், கட்டுப்பாட்டாளரும் சனிக்கிழமை (ஜன.1) காலை பணிக்கு வந்த சங்க நிர்வாகிகள் சுதாகர், முகுந்தன் ஆகி யோருக்கு பணி வழங்க மறுத்துள்ள னர். இதையடுத்து மேல் அதிகாரிகளி டம் சங்கத்தின் சார்பில் முறை யிடப்பட்டது. அதன்பின்னர் வேறு பேருந்தில் பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து டிக்கெட் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வரும் போது, கட்டுப்பாட்டாளர் அதையும் பிடுங்கிக் கொண்டு பணி வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து கிளை மேலாளரிடம் சங்க நிர்வாகிகள் பேசச் சென்ற போது, கிளை மேலாளர் தமக்கு வேறு வேலை உள்ளது எனக் கூறி பார்ப்பதற்கு அனுமது மறுத்துள்ளார். அவரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலச் செயலாளர் சி.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பொதுச் செயலாளர் சி.முரளி, தலைவர் எஸ்.சண்முகம், மத்திய சங்க நிர்வாகிகள் ரகுபதி, பசுவராஜ், மயில்சாமி, இளங்கோவன், மனோன்மணி வெங்கடாஜலபதி, வெங்கடேசன், சிஐடியு கன்வீனர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.