வேலூர். ஜன 4 – அவுட்சோர்சிங் நியமன நடைமுறையை கைவிட வேண்டும். அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. வேலு தலைமை தாங்கி னார். இணைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் வரவேற்றார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் செல்வ குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தை ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ரவி தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் டிடி.ஜோஷி, செய லாளர் அ.சேகர் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,. பணி மேற்பார்வை யாளர் மதிப்பீடு உச்சவரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். 7 ஆண்டு கள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வை யாளர்களை இளநிலை பொறியாளர் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் அசோக்குமார் நன்றி கூறினார்.