கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக் கொலையை கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் தங்கசாலை மணிகூண்டு அருகே மாவட்ட தலைவர் எம்.ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன், பொருளாளர் வி.ஆனந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் ஆகியோர் பேசினர்.