மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் டி.கனிமொழி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தும், மாவட்ட தலைவர் டி.முரளி நிறைவு செய்து பேசினர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தீபா, பொருளாளர் நதியா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (அக்.9) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வச்சா, சரிதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்களை தேடி மருத்துவ ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் மாவட்டத் தலைவர் கே.கிரிஜா, சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயகுமார்,பொருளாளர் எம்.செந்தில், ஏ.வீராசாமி, அரசு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் ஏ.மகாலிங்கம், ஆர்.பிரேமா(ஐசிபிஎஸ்), அருணா(எம்டிஎம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பணி நிரந்தரம், வரையறுக்கப்பட்ட ஊதியம், ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ரீனா தலைமை தாங்கினார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் இரா.பாரி, கே. நாகராஜன், பி .கணபதி, எம் .பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.