districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி டி.ஆர்.இ.யூ, ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ, ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் சென்னை புறநகர் ரயில் நிலையம் அருகே செவ்வாயன்று (21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  ஆர்.இளங்கோவன்,பேபி ஷகிலா அருண்குமார் செழியன், வி.அரிலால், சுரேஷ் (டிஆர்இயூ), குமரேசன் (ஓடும் தொழிலாளர் கழகம்) , பா.ராஜாராமன், ஜோஷி, சத்யமூர்த்தி, வேலாயுதம் (யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன்) ஆகியோர் பேசினர்.