தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12 அன்று புதிய பென்சன் திட்ட எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்புத் துறை ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக ஆவடியில் உள்ள ஓசிஎப் அலுவலகம் முன்பு பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.