அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூபாய் 26 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும், கட்டுமானம், முறைசாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு என்ற பெயரில் முடக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் சேஷாத்திரி தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை விலக்கி சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் திருச்செல்வம், மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ், மாவட்டப் பொருளாளர் பால்ராஜ், மாநில குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.