ஜிஎஸ்டி சாலை - ஜமீன் பல்லாவரம் இணைக்கும் ரயில்வே மேம்பாலம், மேம்பாலம் ஒட்டிய ஈஸ்வரி நகர் அணுகு சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி புதனன்று (டிச.22) பல்லாவரம் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க பகுதிச் செயலாளர் ஜோன்ஸ்மேரி தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.சித்ரகலா, நிர்வாகிகள் ரேவதி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுசீந்திரா, பகுதி தலைவர் சிந்தன், செயலாளர் ஹேம குமார் உள்ளிட்டோர் பேசினர்.