districts

img

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்து அனைத்து பொதுமக்கள் அமைப்புகளின் சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே புதனன்று  சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக தேரடியில் இருந்து பெரியார் தூண் வரை ஊர்வலம் நடைபெற்றது.