districts

img

ஆட்டோ தொழிலாளர்களின் சங்க அலுவலகம் இடிப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை, பிப். 10- பழைய வண்ணாரப்பேட்டை, மூல கொத்தளம் மிண்ட் ஐடிஐ அருகில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் தொழிற்சங்க அலுவலகம் கடந்த 7ஆம் தேதி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபுதாஸ் அராஜகத்தால் இடித்துத்தள்ளப்பட்டது. இதையடுத்து சிஐடியு ஆட்டோ நிறுத்த கொடி கம்பத்தையும், பெயர் பலகையையும் வன்மத்தோடு திட்டமிட்டு இடித்து தள்ளிய உதவி செயற்பொறியாளர் பிரபுதாசைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜன. 10) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து திங்க ளன்று காலை பழைய கிருஷ்ணா திரை யரங்கம் அருகே தொழிலாளர்கள் திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செயற்பொறியாளர் லோகேஷ் மற்றும் காவல் துறை உதவி ஆணையர் சதாசிவம் ஆகியோர் சிஐடியு மாவட்ட நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது சங்கத்தின் பெயர்ப்பலகையும் - கொடிகம்பமும்  திட்டமிட்டு இடித்து தள்ள வில்லை என்றும், தவறுதலாக நடைபெற்று விட்டது என்றும், அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் வி‌. ஜெயகோபால், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.லோகநாதன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி,  டி.வெங்கட் (சிஐடியு), ச.முருகேசன் (வாலிபர் சங்கம்), ஆட்டோ சங்க பகுதி தலைவர் ச.குட்டி, பகுதிச் செயலாளர் வி.திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.