districts

img

குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்

ஆர்.கே. நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா தலைமையில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் புதனன்று (அக். 26) நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோடீஸ்வரி, செயலாளர் பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.