திருவள்ளூர், அக் 2- பெண்கள் விரோத மோடி அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (அக். 2) மீஞ்சூர் முதல் பொன்னேரி 13. கி.மீ. தூரம் நடைபயணம் நடைபெற்றது. மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டு களில் வரலாறு காணாத வகையில் சமையல் எரி வாயு, டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி யுள்ளது. இதனால் அத்தி யாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. பெண்களுக்கு எதிரான மனு ஸ்மிருதி, சனாதன கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் மோடி அரசை கண்டித்து அக்டோ பர் 5 அன்று தில்லியில் மாபெரும் பேரணி நடை பெற உள்ளது. இதனை விளக்கி மாதர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (அக் 2) கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் நடைபெற்றது. மீஞ்சூரில் துவங்கிய பிரச்சாரம் நாலூர், கம்ம வார்பாளையம், வன்னிப் பாக்கம்,. இலவம்பேடு, மேட்டுப்பாளையம், வேண்பாக்கம் வழியாக பொன்னேரியில் நடை பயணம் நிறைவுற்றது. இதற்கு மாதர் சங்கத்தின் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கவிதா தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலா ளர் அ.பத்மா துவங்கி வைத்தார். மாவட்டத் தலை வர் இ.மோகனா, பொன்னேரி பகுதி செயலா ளர் லாவண்யா, சிஐடியு நிர்வாகிகள் கதிர்வேல், ஜெயவேல், ரமேஷ்குமார், வெங்கடேசன், அருள், வாலிபர் சங்கத்தின் நிர்வாகி ஜெய் கணேஷ், விதொச மாவட்ட தலைவர் தவமணி, இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் டிக்சன், ஸ்வேதா உள்ளிட்ட பலர் வாழ்த்திப்பேசினர். முன்னதாக மாவட்டத் தில் மாதர் சங்கத்தின் கிளை களில் பிரச்சாரம் நடை பெற்றது.