districts

img

பல்கலை கழக துணை வேந்தரை நீக்க கோரி புதுவையில் ஆவேசப் போராட்டம்

புதுச்சேரி,ஆக.11-

     மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெள்ளியன்று (ஆக.11) புதுச்சேரி சட்டப் பேரவை அருகில் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை கள் கட்சிகள் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது.

    ஊழல் செய்பவர்க ளுக்கு ஆதரவாக பெருந் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு நிர்வாக ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைத்த, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரை உடனடி யாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து  உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விட வேண்டும்.

     ஊழல் புகாரின் உண்மை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலை வர் ஆனந்துக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி சட்டப் பேரவை அருகில் நடை பெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தேவ.பொழிலன் ஆகி யோர் கண்டன உரையாற்றி னார்கள்.  

     சிபிஎம் மாநில  செயற் குழு உறுப்பினர் வெ.பெரு மாள், மூத்த தலைவர்கள் தா. முருகன், சுதா சுந்தர ராமன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர்கள் நாரா.கலைநாதன், ஆர்.விசுவநாதன், நிர்வாகி கள் சேது செல்வம், அபிஷேகம், தினேஷ் பொன்னையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட திரளா னோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.