districts

img

சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட கோரிக்கை

சிதம்பரம், செப். 27- சிதம்பரத்தில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் முடிவை கைவிட வேண்டும் என்று சிறு கடை தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரம் சாராட்சியர் ஸ்வேதா சுமனை சந்தித்து கடலூர் மாவட்ட சிஐடியு சாலை யோர சிறுகடை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சங்கமேஸ்வரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சாலை யோர சிறுகடை தொழிலாளர்கள் மனு அளித்தனர். விவரம் வருமாறு:- சிதம்பரம் நகரில் சாலையோரத்தை நம்பி வியாபாரம் செய்யும் கடைகளை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  சாலையோர வியாபாரிகள் குறித்து பாதுகாப்பு உத்தரவுகள், சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சிதம்பரம் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை ஆகியவை சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு நெறிமுறைபடுத்தும் வரை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். சாலையோரத்தில் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கொட்டகை உள்ளது. அதை எடுத்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்து விடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். சாலையோர சிறு கடை தொழிலாளர்கள் சங்கத்தின்  தலைவர் அப்துல் அக்கீம்.செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.