திருவண்ணாமலை, நவ. 27- பட்டியலின மக்களின் உரிமைக்கான கோரிக்கை சாசன கையெழுத்து இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது. திருவண்ணாமலையில் 5 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறுவதற்காக நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலை வர் எஸ்.ராமதாஸ் தலைமை தாங்கினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், சிஐடியு நிர்வாகி எம்.வீர பத்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில து.பொதுச்செயலாளர் பி.செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகலாதன், வாசுகி, எ.லட்சுமணன், பெரணமல்லூர் சேகரன், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.