கடலூர்,டிச.17- கடலூரில் ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.பழனி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர் த.குப்பன் துவக்கவுரை ஆற்றினார். அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்கத்தில் மாலை மணி, குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தில் ஏ. கிருஷ்ணமூர்த்தி, தேவராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் எல்.ஹரிகிருஷ்ணன், டி. ரவிச்சந்திரன், சகோதர சங்கங்களில் நிர்வாகிகள் ராமசாமி, வெங்கடாசலம், காசிநாதன், சுகுமாரன், மதியழகன், சுப்பிரமணி, சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதிய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார். வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் எம்.மருதவாணன் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். தீர்மானங்கள் 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனகாவலர்கள், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைவருக்கும் செலவினத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.