விழுப்புரம், ஜூலை 19-
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை சமூக வலைதளங்கள் மூலம் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விழுப்புரம் மாவட்டம், பகண்டை கிராமம் பாமகவை சேர்ந்த முருகவேல் என்பரை கைது செய்ய வலியுறுத்தி தொரவி கிராமத்தில் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி உதவி ஆய்வாளர் காத்தமுத்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் மற்றும் காவலர்கள் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது,சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தனர். பிறகு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.