விழுப்புரம்,ஜூன் 26-
திண்டிவனம் நத்தை மேடு பகுதியில் மான் கறி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட வன அதிகாரிக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனசரக அலுவலர் புவனேஷ் தலை மையிலான அதிகாரிகள் அந்தப் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் மான் கறி விற்பனை செய்த நபர் தப்பமுயன்றபோது அவர்கள் மடக்கி பிடித்த னர். விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியை சேர்ந்த அஜித் என்பதும் இவர் திரு வண்ணாமலை யிலிருந்து மானை வாங்கி அதை அங்கேயே வெட்டி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவரை வன பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த னர்.