districts

img

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலம் 110 பழைய தூண்களை பயன்படுத்த முடிவு

சென்னை,மே 23-  சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பறக்கும் சாலைக்காக கடந்த 2007ல் அமைக்க ப்பட்ட 110 தூண்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . திமுக ஆட்சியின்போது 2007ல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையிலும், சென்னை துறை முகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ.1,815 கோடி செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்தது. இந்த நிலையில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியா விலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் வகை யில் முதல் அடுக்கில் கன்டெய்னர் லாரிகள், கீழடிக்கில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச் சாலை ஆக அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது.

மதுரவாயலில் இருந்து துறை முகம் வரை சுமார் 20 கி.மீ தூரம் மேலடுக்கு பாலம் அமைக்கப் படுகிறது. கோயம்பேடு முதல் துறை முகம் வரை சுமார் 14 கி.மீ தூரம் கீழடுக்கு பாலம் அமைக்கப்படு கிறது. மேலடுக்கு சாலையில் துறைமுகத்துக்கு போகும் கனரக வாகனங்கள் அதன் வழியாக சென்று விடும். கீழடுக்கு என்பது பொது மக்கள் பயன்படுத்துவது. 13 இடங்க ளில் மேம்பாலத்தில் இறங்கும் வகை யில் இறங்கு பாலம் அமைக்கப் படுகிறது. இதில், 7 நுழைவு பாதை யாகவும், 6 வெளியே செல்லும் பாதை யாகவும் அமைக்கப்படுகிறது. இந்த திட்ட மதிப்பீட்டின் படி ரூ.5855 கோடி ஆகும். இரண்டாம் அடுக்கில் அமைய உள்ள நான்கு வழி சாலை நேரடி யாக மதுரவாயலில் இருந்து துறை முகம் வரை செல்கிறது. இதில் கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்திற்கு பயன்படும் வகை யில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 20.5 கி.மீ மேம் பாலத்தில் 9 கி.மீ தூரம் சென்னை கூவம் நதி வழியாக செல்கிறது. இந்த கூவம் நதியோரம் ஏற்கனவே 125 தூண்கள் அமைக்கப்பட்டன. இதில், 110 தூண்கள் பயன்படுத்தப்பட விருக்கிறது. மீதமுள்ள தூண்கள் இடிக்கப்படவிருக்கிறது. தற்போது சாலை அமைக்கும் பணிக்காக ரூ.470 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மதுர வாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பால திட்ட த்துக்கு வரும் மே 26ம் தேதி  பிர தமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டு கிறார்.  இந்த திட்டம் செயல்படுத் தப்பட்டால், சென்னையில் போக்கு வரத்து நெரிசல் குறையும்,  துறைமு கத்துக்கு சரக்கு பொருட்கள் வரு வது அதிகரிக்கும். இந்த பாலம் வந்தால் கோயம்பேட் டில் இருந்து துறைமுகத்திற்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம் என கூறப்படுகிறது.