சென்னை,டிச.28- சென்னை திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வந்தனர். ஏ, பி, சி, டி, இ, எப் என மொத்தம் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் அருகருகே கட்டப்பட்டு பொது மக்களுக்கு 1998-ம் ஆண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுமார் 25 ஆண்டுகள் பழமையான இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் அதனை பொருட் படுத்தாமல் மக்கள் அங்கேயே வசித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அடுக்கு மாடி கட்டிடத்தின் உறுதித்தன்மை யில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பி லும் 2 கட்டிடங்கள் இருந்தன. இந்த 2 கட்டிடங்களில் இருந்தும் ஞாயி றன்று இரவு மக்கள் வெளி யேறினார்கள். இந்த நிலையில் திங்களன்று காலையில் டி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. பொதுமக்கள் வெளியேறிய சில நிமிடங்களிலேயே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 24 வீடு கள் தரைமட்டமானது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அப்போது கட்டிடம் மக்கள் வாழ்வதற்கு தகுதி இன்றி உறுதித்தன்மை இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக திங்களன்று இரவு அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவினரும் ஆய்வு மேற்கொண்ட னர். அவர்களும் அந்த 6 குடியிருப்பு கள் இனி பொது மக்கள் வசிப்ப தற்கு தகுதி இல்லாதவை என்பதை உறுதி செய்தனர். எந்த நேரத்தி லும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு களும் இடிந்து விழலாம் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடம் ஏற்பட்டது. கடைசியாக இடிந்து விழுந்து தரைமட்டமான டி பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு 2 பகுதி களைக் கொண்டு இருந்தது. அதில் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் இன்னொரு பகுதியும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.
இதன் அருகில்தான் இ பிளாக் பகுதி குடியிருப்பு உள்ளது. டி பிளாக்கில் மிச்சமுள்ள கட்டிடமும் இடிந்து விழுந்தால் அது இ பிளாக் கில் வசிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக அங்கு வசித்து வந்த 24 குடும்பத்தினரும் திங்களன்று வெளியேற்றப்பட்டனர். சற்று தொலைவில் ஏ, பி, சி, எப் ஆகிய குடியிருப்புகள் ‘ப’ வடிவில் இருக்கிறது. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் செவ்வாயன்று காலை முதல் தொடங்கி உள்ளது. மக்கள் உயிர் பயத்தோடு தங்கள் வீடுகளுக்குள் சென்று தங்களது பொருட்களை எடுத்தனர். இதுபோன்று வெளியேறும் மக்கள் தங்குவதற்கு வசதியாக அதே பகுதியில் 4 திருமண மண்ட பங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள 6 குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதுபோன்ற வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறும் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசின் ஆலோசனையின் பேரில் மாற்று இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அவர்களுக்கான வாடகை கொடுப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த டி பிளாக் கட்டிடத்தில் இடிபாடுக ளுக்குள் சிக்கி இருக்கும் பொருட் களை மீட்கும் பணியில் தீய ணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயன்று காலை 6 கியாஸ் சிலிண்டர், பீரோ மற்றும் மாணவர்களின் பள்ளி ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து பொது மக்க ளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.