சென்னை, ஏப். 15 - நோட்டாவுடன் பாஜக போட்டியிடுகிறது என்று தயாநிதிமாறன் கூறினார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஞாயிறன்று (ஏப்.14) அன்று துறைமுகம், எழும்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியா முழுவதும் பரவி உள்ளது. அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை அரசு செயல்படுத்தி வரு கிறது. இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43 விழுக்காட்டினர் தமிழ கத்தில் உள்ளனர். இந்தியா வின் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதுபோன்ற திட்டங்களை எதிர்க்கட்சிகளால் கூறி வாக்கு கேட்க முடிய வில்லை. இந்த தேர்தலில் திமுக-அதிமுக அணிக்கு இடையேதான் போட்டி நடை பெறுகிறது. பாஜக நோட்டா வுடன் போட்டி போடுகிறது. அந்த கட்சி திமுக வுடன் மோதப் பார்க்கிறது என்றார். இந்த பிரச்சாரங்களில் திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மனிதநேய ஜன நாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, சிபிஎம் பகுதிச் செயலாளர்கள் ஜலாலுதீன் (துறைமுகம்), கே.முருகன் (எழும்பூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.