districts

img

நாடகங்களுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள்: தயாநிதி மாறன்

சென்னை, ஏப். 9 - பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் நடத்தும் நாடகங்களுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்று தயாநிதி மாறன் கூறினார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் திங்களன்று (ஏப்.8) ஆயிரம் விளக்கு பகுதி, 117, 118, 111 வட்டங்க ளில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  பிரி வினைவாதம், வெறுப்புணர்வு, மதத்தை அரசியலில் கலப்பதுதான் பாஜகவின் கொள்கை. அதற்கெதிராக உள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் கூறியிருப்பது கண்டிக் கத்தக்கது என்றார். பிரதமர் ‘நல்லா’ உழைக்கிறார். அவரை மாதிரி நடிக்கவும், உடை மாற்ற வும் வேறு ஆள் கிடையாது. பிரதமர் செல்லும் பாதையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அவர்  பார்க்கக் கூடாது என்பதற்காக துணி போட்டு மூடி உள்ளார்கள். பிரதமர் யாரை பார்க்க வருகிறார். உழை ப்பாளி மக்களை பார்க்க மாட்டாரா? மேற்கு மாம்பலம் மக்களை மட்டும் தான் பார்ப்பாரா? பிரதமர் உண்மை நிலையை பார்க்க வேண்டும். அவர்கள் வேண்டும், நாங்கள் வேண்டாமா? தேர்தல் வந்தவுடன் ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து நாடகம் நடத்துகிறார்கள். ஒன்றிய அமைச்சர் மட்டுமல்ல தினசரி யார் வேண்டுமானாலும் வரட்டும், எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும். இந்த நாடகங்களுக்கு மயங்கமாட் டார்கள். மத்திய சென்னை வாக்கா ளர்கள் தெளிவாக உள்ளனர். திமுக அணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.