மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் செவ்வாயன்று (ஏப்.9) திருவல்லிக்கேணி பகுதி, 116, 115, 119, 120 வட்டங்களில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வின்போது திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.