districts

img

பாலம் இல்லாததால் பொதுமக்கள் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கிருஷ்ணகிரி, டிச 19-  ஓசூர் பேருந்து நிலை யத்திலிருந்து ஆவலபள்ளி சாலையில் 3 கி.மீட்டர் அப்பால் உள்ளது பாரதிநகர்.   இங்கு 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட 600 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இவர்கள் அனைவரும் மிகக் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்தவர்கள்.   இந்நகருக்கு பின்புறம் ஓடும் 50 அடி அகல கால்வாய் மறுகரையில் விஸ்வ நாதபுரம்  குடியிருப்புகளும், சிவன் கோவில், தனியார் மருத்துவமனைகள், அதை யொட்டி ஓசூர் மாநகராட்சி அலுவ லகம், பல லேஅவுட் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு தொழில் பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகியவை உள்ளன.  ஓசூர் தர்காவில் உள்ள சந்திராம்பிகை ஏரியிலிருந்து வரும் இந்த கால்வாயில் கடந்த  25 ஆண்டுகளாக ஓசூரின் கழிவு நீர் ஓடிக்கொண்டி ருக்கிறது.கடந்த மாதம் பெய்த கடும் மழையில் 50 அடி அகல  கால்வாய் நிறைய தண்ணீர் சென்றது. மழைக்காலம் தவிர ஆண்டு முழுவதும் கழிவு நீர் 4 அடி ஆழத்திற்கு ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில், பாரதி நகர் மக்கள் கால்வாயின் மறுகரையில் உள்ள விஸ்வ நாதபுரத்திற்கு செல்ல பத்து அடி ஆழமுள்ள  கால்வாயில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் அதிகமாக வரும்போது  உள்ளே இறங்க முடியாது.  இதனால் ஏழு கிலோ மீட்டர் சுற்றி  இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டியுள்ளது.

தற்போது ஒரு பெரிய மரம் சாய்ந்து கால்வாயின் குறுக்கே கிடப்பதால் மாணவர்கள் இந்த மரத்தின் மீது ஏரி சர்க்கஸ் போல ஆபத்தான நிலையில்  பயணம் செய்கின்றனர். அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதென்றால் ஆட்டோவிற்கு குறைந்தது 200 ரூபாய் வரை செலவு செய்து  சுற்றிவர வேண்டியுள்ளது.                       இதுகுறித்து புதிதாக துவக்கப்பட்டுள்ள அங்குள்ள சிஐடியு ஆட்டோ டெம்போ தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஆர்கே முத்து, பொருளாளர் ரங்கநாதன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாரதி நகரை  ஆய்வு செய்தனர்.   பாரதி நகர் விஸ்வநாதபுரம் இடையில் செல்லும் கால்வாயின் குறுக்கே மக்களும் ஆட்டோக்களும் சென்று வர உடனடியாக பாலம் கட்டித்தர வேண்டும், பாரதி நகரில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்,  பாரதி நகரின் அனைத்து தெருக்களிலும் உள்ள பழைய கழிவுநீர் கால்வாய்களை தூர்வரி சீர்படுத்த வேண்டும்,  இல்லாத தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள்,   கான்க்ரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் ஓசூர் நகர செயலாளர் சி.பி.ஜெயராமன்  மாநகராட்சி ஆணையாளருக்கும், சாராட்சியரும் கோரிக்கை விடுத்துள்ளார்.