districts

img

தண்ணீரில் மூழ்கி சேதமான நெற்பயிர் தியாகதுருகம் அருகே மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஆக.16-

     கள்ளக்குறிச்சி மாவட் டம், தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200- ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற் பயிர் மழை நீரில் மூழ்கி சேத மடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் மழை நீரில் மூழ்கி சேத மடைந்த நெற்பயிர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பாதிக்கப் பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டிருக்கும் பரப்ப ளவு, நெல் ரகம் மற்றும் சேத விவரம் குறித்து கேட்ட றிந்தார். ஏரியில் இருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிர மித்துள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் முளைக்கும் நிலை உள்ள தாக விவசாயிகள் கூறினர்.  

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று வடிகால் வாய்க்கால் ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் விவ சாயிகளிடம் கூறினார்.