விழுப்புரம்,நவ.19- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கரும்பு தோட்டம் திடீரென தீப்பற்றி எரிந்தது. திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி துரை என்பவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே கரும்பு சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர், ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.