districts

இணையதள குற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிகை

விழுப்புரம், டிச. 13- இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட சைபர்கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட சைபர்கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இணையதள குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) அலுவலகம் செயல்படுகிறது. தினசரி சைபர் கிரைம் குற்றவாளிகளால் பொதுமக்கள், பணத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றவாளிகள் எப்படியாவது ஏமாற்றி பொதுமக்கள், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால் இழந்த பணத்தை மீட்கலாம் என்ற விவரம் பலருக்குத் தெரியவில்லை. தாமதமாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது கடினம். அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர், செல்போனில் தொடர்புகொண்டு பேசினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்களின் விழிப்பு ணர்வுக்காக ஒன்றிய அரசு உலநெசளயகந.படிஎ.in என்ற வலைதளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், ருஞஐ முகவரி ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களை தொடர்பு கொண்டவரின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், ருஞஐ முகவரி ஆகியவற்றை உலநெசளயகந.படிஎ.in என்ற வலைதளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க உதவி ஆய்வாளர் 94982 02106 மற்றும் றறற.உலநெசஉசiஅந.படிஎ.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.