ராணிப்பேட்டை, அக். 26 - ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் சிப்காட் பன்ஸ் கூல் தனியார் தொழிற்சாலையில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை முடக்கம் செய்து அவர்கள் வெளியே எடுக்காதவாறு தடுக்கப்படும். மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வராமலேயே றறற.உலநெசஉசiஅந.படிஎ.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன், உதவி காவல் ஆய்வாளர் சஞ்சீவிராயன், மனிதவள மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.