கடலூர் உலகின் 200 புற்றுநோய் மையங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கிற ரசாயன தொழிற்சாலை களில் இருந்து வெளி யேறும் அபாயகரமான வாயுக்களும், கழிவுகளும் ஆகும்.
கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மொத்தம் 54 நிறுவனங் கள் உள்ளன. இதில் 44 நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் 33 தொழிற்சாலைகள் ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள். கடலூரைச் சுற்றி பாண்டிச்சேரி வரை 10 புற்று நோய் மருத்துவமனைகள் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ளது. இதிலிருந்து இதன் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம். பொதுவாக புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயகரமான வாயுக்கள் மற்றும் கார்பன்டை சல்பைடு ப்ரோ மின் போன்ற வாயுக்கள் உயரமான சிம்னி மூலம் இரவும் பகலும் காலை வேளையி லும் மழைக் காலங்களில் தங்கு தடை இன்றி காற்றில் கலந்து வருகிறது. சிப்காட் வளாகமே வாயுக்களின் துர்நாற்றத்தால் வாழ இயலாத சூழலை அந்தபகுதி மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
அபாயகரமான கழிவுகள்
அபாயகரமான கழிவுகளை தொழிற் சாலை நிர்வாகத்தினர் செப்டிக் டேங்கில் விட்டு மூடி செல்கின்றனர். கழிவறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற சுமார் பத்து தொழிலாளர்கள் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறிய அபாயகரமான வாயுக்களால் ஆசனவாய். பிறப்புறுப்பு வெந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலர் இன்னும் அந்த இடத்தில் தழும்புகளுடன் ஆசனவாய் சுருங்கி சொல்ல முடியாத வேதனையில் உள்ளனர். மேலும் கடலூரில் அதன் வெப்ப நிலையில் தான் சுத்திகரிக்கப் பட்ட கழிவு நீர் சிப்காட் ரசாயன ஆலை யில் இருந்து கடலில் விடப்படுகிறது.
ரசாயன கழிவுநீரை குளிர்வித்து கடலில் விடுவதற்கு ஆகும் செலவை கருத்தில் கொண்டு குளிர்விக்காமல் கடல் வெப்பத்தை விட அதிகமாக 5 டிகிரி முதல் 10 டிகிரி வரை தொடர்ந்து விட்டதன் விளைவு கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ், டான் பாக், சோலாரா, கேம்லாஸ்ட், ஆகிய நான்கு தொழிற்சாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கூறும் போது இந்த தொழிற்சாலைகளினால் காற்று, நிலத்தடி நீர், மாசடைந்துள்ளது. இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுகள் கடல் மற்றும் ஆற்றில் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின் றன, இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட் டுள்ளன எனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து முறை யாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் சிப்காட் வளாகத்தை அரசு அமைத்த போது அனைத்து பகுதி மக்களும் கடலூர் மாவட்டம், தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்ற நிலையில் வரவேற்றனர். தற்போது உள்ள நிலைமையோ வேறு. இன்று சிப்காட்டில் நிலவும் அபாயகரமான சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு நகரமாக கடலூர் உருவெடுத்துள்ளது. எந்த தொழிற் சாலை துவங்கினாலும் அதன் அபாய கரமான ரசாயன கழிவுகளை மக்களை பாதிக்காமல் எப்படி கையாள போகிறார் கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுமதி பெறுகிறார்கள். ஆனால் தொழிற்சாலை தொடங்கப்பட்டவுடன் அவர்கள் விருப்பம் போல் செயல்பட அரசு அனு மதித்தன் விளைவு இன்று கடலூரில் மட்டும் சுமார் 75 சதுர கிலோமீட்டர் நிலம், நீர், காற்று, கடல் மாசுபட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் அதன் ரசாயன கழிவு களை கெடிலம், பெண்ணையாறு, குளம், குட்டை, வாய்க்கால் என்று இரவில் டேங்கர் லாரி மூலம் கொட்டி வரு வது கடலூர் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். சமீபத்தில் ஜவான்ஸ் பவன்சாலையில் கெடிலம் ஆற்றில் பட்டப்பகலில் ஒரு சிப்காட் தொழிற் சாலை டேங்கரில் நச்சுக்கழிவுகளை கொண்டுவந்து ஆற்றில் கொட்டும் பொழுது பொதுமக்கள் சூழ்ந்து அந்த டேங்கரை சிறைபிடித்தனர். உடனே மாநகராட்சி அதிகாரிகள் வந்து சமாதானம்பேசி விடுவித்து அந்த டேங்கருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆனால் எந்த வழக்கும் ஆலையின் மேல் பதிவு செய்யா மல் விட்டு விட்டனர். ஒரு தொழிற்சாலை யில் இருந்து ஃப்ளோரின் கழிவுகள் அதிகமாக கடலில் விடுவதால் மீன் அதை உட்கொள்கின்றன. நாளடைவில் மனிதர்கள் மீனை சாப்பிடுவதால் சிப்காட் , குடிகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ப்ளோரோசீஸ் என்று சொல்லக்கூடிய கால் மூட்டு எலும்பு நோய் உருவாகி நடக்க முடியாமல் பலர் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் வாழ்வாதாரமின்றி அரசு உதவியும் கிடைக்காமல் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்.
மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் குளம், குட்டை தண்ணீர் மாசுபட்டு கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. மனிதர்கள் கால்நடைகள் அதை பயன்படுத்த முடியாத சூழலில் மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கையாளுகிற துறைமுகமாக கடலூர் துறைமுகத்தை மாற்றுவதற்கான வேலை நடந்து வருகிறது. அப்படி மாறினால் திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி கொட்டி வைப்பதால் நிலத்தடி நீர் மேலும் மாசுபட்டு கறுப்பாக மாறப் போகிறது. அது மட்டுமல்லாமல் அபாயகரமான கழிவுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல் ஆயிரம் அடி முதல் 3000 அடி வரை வளாகத்திற்கு உள்ளேயே போர் போட்டு பூமியில் செலுத்தி மக்களுக்கு மிகப்பெரிய நிலத்தடி நீர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். காற்று மாசு அளவிடும் அமைப்பு தனது அறிக் கையை அரசுக்கும் மக்களுக்கும் தருவதே இல்லை. பாய்லர் வெடிப் பதால் இதுவரை 140 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.பலர் அசைவற்று வீட்டில் முடங்கி உள்ளனர்.
மக்கள் போராட்டத்தால் மற்ற நாடுகளில் துரத்தி அடிக்கப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளின் புகலிடமாக கடலூர் மாறி உள்ளது பெரும் சோகம். மேலை நாடுகள் இங்கு ஒரு போபால் போன்று விபத்து எப்பொழுது வேண்டு மானாலும் நடக்கலாம் ஆகவே சிதம்பரம் செல்ல மாற்று வழியில் செல்லுங்கள் என்று தனது சுற்றுலா பயணிகளை அறிவுறித்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் எல்லா வற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது வேதனையளிக்கிறது. இந்நிலையில் ரூ.75 ஆயிரம் கோடி செலவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் (Petro chemical zone) அனுமதிக்கப் பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய ரசாயனத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக கடலூர் மக்களுக்கு சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் கேள்விக்குறியாக மாறி யுள்ளன. எனவே சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கடலூர் மக்களை ஆட்சியாளர் கள் காப்பாற்றுவார்களா ?