districts

img

டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை

கடலூர், செப்.14- கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் காய்ச்சல் மட்டும் சளியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதே போல ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், வண்டி பாளையம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவ மனையில் வியாழக்கிழமை முதல் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்க ளுக்கு தனி வார்டு, ஆண்களுக்கு தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் குழந்தைகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு களில் நோயாளிகளுக்கு கட்டில்கள் அமைக்கப்பட்டு, அந்த கட்டிலை சுற்றிலும் கொசு வலைகள் அமைக்கப்பட்டுள்ளது.  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேரும் தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குநர் சாரா செல்லின் பாலிடம் கேட்டபோது,“ கடலூர் அரசு மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க மருத்து வர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் கூறினார். மருத்துவர்கள் நோயாளிகளை தீவிர மாக கண்காணித்து சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் அவர் தெரிவித்தார்.